வாலேயில் உள்ள ஒரு மலை மேய்ச்சல் நிலத்தில், நேற்று முன்தினம் இரவு மின்னல் தாக்கியதில் 97 வாலே கறுப்பு மூக்கு செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.
பின்டால் பள்ளத்தாக்கில் உள்ள எக்கர்ஹார்ன் மலை மேய்ச்சல் நிலத்தில், நேற்றுமுன்தினமிரவு இடியுடன் கூடிய மழை பெய்த போது இந்த அனர்த்தம் ஏற்பட்டது. மின்னல் தாக்குதலில் சுமார் 80 ஆடுகள் உயிர் தப்பியுள்ளன.
மின்னல் தாக்கிய இடத்திலிருந்து சுமார் நூறு ஆடுகளின் சடலங்கள் நேற்று ஹெலிகொப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளன.
செம்மறி ஆடு வளர்ப்பாளரான கிலியன் ஷ்னிட்ரிக், பெரிய வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக ஆடுகள் அனைத்தும் ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறினார்.
இந்தச் சம்பவம் செம்மறி ஆடு வளர்ப்போர் சமூகத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாலே கறுப்பு மூக்கு செம்மறி ஆடு என்பது சாதாரண பண்ணை விலங்கை விட மேலானது. இது அந்த மாகாணத்தின் ஒரு உயிருள்ள கலாச்சாரச் சொத்தாகக் கருதப்படுகிறது, மேலும் இதைப் பேணிப் பாதுகாப்பது பாரம்பரியத்திலும் பேரார்வத்திலும் ஆழமாக வேரூன்றியுள்ளது.
இவ்வாறு பாதி மந்தையை இழப்பது, பாதிக்கப்பட்ட பண்ணைகளைப் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது.
மூலம்- bluewin


