சூரிச்சில் நேற்று நடந்த 33வது தெரு ஊர்வலத்தில், சுமார் 9 லட்சம் மக்கள் கலந்துகொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏரிக்கரையோர நிழலான இடங்கள் பெரும்பாலும் நிரம்பி வழிந்தன, அதே நேரத்தில் நீர்த் துப்பாக்கிகள், தெளிப்பான்கள், நீர்த் தெளிப்பு அமைப்புகள் மற்றும் பிரம்மாண்டமான நீர்த்தூவிகள் வெப்பத்திலிருந்து நிவாரணம் அளித்தன.
ஜூலை 25 அன்று பெர்லினில் நடந்த கிறிஸ்டோபர் தெரு தினத் தாக்குதலைத் தொடர்ந்து, சூரிச்சில் சட்ட அமுலாக்கத் துறையினர் குறிப்பாக விழிப்புடன் இருந்தனர்.
இந்த ஆண்டு ஊர்வலப் பாதையின் அணுகல் புள்ளிகளில் காவல்துறையினர் அதிகளவில் காணப்பட்டனர்; சில அதிகாரிகள் தலைக்கவசங்கள், குண்டு துளைக்காத கவச உடைகள் மற்றும் துணை இயந்திரத் துப்பாக்கிகள் உள்ளிட்ட முழுமையான பாதுகாப்பு உபகரணங்களுடன் இருந்தனர்.
கொன்கிரீட் தடுப்புகள் மற்றும் பிற பௌதீகத் தடைகள், விழா நடைபெறும் இடத்திற்குள் அங்கீகரிக்கப்படாத வாகனங்கள் நுழைவதைத் தடுத்தன. சனிக்கிழமை பிற்பகல் வரை பெரிய சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை.
மூலம்- bluewin


