ஸ்வீடன் உயர்நிலைப் பள்ளி ஒன்றில், வாளுடன் நுழைந்த 18 வயது இளைஞன் ஒருவர் மாணவர்களைத் தாக்கியதில், ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர் அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காவல்துறையினர் அவரைச் சுட்டுக் கைது செய்துள்ளனர்.
மத்திய ஸ்வீடன் நகரமான பாகர்ஸ்டாவில் உள்ள பிரினெல் உயர்நிலைப் பள்ளியில், நேற்றுப் பிற்பகல் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.


