ஓகஸ்ட் மாத இறுதியில், மூன்று நோயாளிகள் மரணமானதைத் தொடர்ந்து, நோவர்டிஸ் நிறுவனம் நோயெதிர்ப்பு மற்றும் நரம்பியல் துறைகளில்தன்னுடல் தாக்குநோய்களுக்கான சோதனை செல் சிகிச்சைகள் தொடர்பான பல மருத்துவப் பரிசோதனைகளை, நிறுத்தியுள்ளது.
பாசலைத் தளமாகக் கொண்ட இந்த மருந்து நிறுவனமானது, இந்தச் செய்தியை AWP செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியது.

இந்தச் செய்தி முதலில் அமெரிக்க செய்தித்தாளான ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ (WSJ) மூலம் வெளியிடப்பட்டிருந்தது.
மேலும், “நோயெதிர்ப்பு விளைவு செல்-தொடர்புடைய ஹீமோஃபேகோசைடிக் நோய்க்குறியின் மூன்று நிகழ்வுகள் பதிவானதைத் தொடர்ந்து, கேள்விக்குட்பட்ட திட்டங்களை இடைநிறுத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டது; அதன் சிக்கல்கள் மரணத்தை விளைவித்தன” என்றும் அது கூறியது.
ராப்காப்டாஜீன் ஆட்டோலூசெல் (அல்லது ராப்-செல்) என்று அழைக்கப்படும் இந்த சோதனை சிகிச்சையானது, CAR-T எனப்படும் செல் சிகிச்சையை அடிப்படையாகக் கொண்டது.
இது ஒரு நோயாளியின் வெள்ளை இரத்த அணுக்களை மரபணு ரீதியாக மாற்றி, குறைபாடுள்ள செல்களை அழிக்கத் தூண்டுகிறது.
நோயெதிர்ப்பு எதிர்வினையால் ஏற்படும் மரணம், இந்த வகை சிகிச்சை அணுகுமுறையுடன் தொடர்புடைய ஒரு அறியப்பட்ட ஆபத்து ஆகும்.
மேலும், அமெரிக்கப் போட்டியாளரான பிரிஸ்டல்-மையர்ஸ் ஸ்குவிப் நிறுவனம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதற்கு முன்னர் இதேபோன்ற சோதனைகளை இடைநிறுத்தியிருந்ததை WSJ குறிப்பிட்டது.
இருப்பினும், புற்றுநோய் சிகிச்சையில் உள்ள ராப்-செல் திட்டம் இந்த இடைநிறுத்தத்தால் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்பதை நோவார்டிஸ் நிறுவனம் வலியுறுத்தியது.
அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதற்காக, தற்போது வெளிவந்துள்ள தரவுகளை அந்நிறுவனம் கவனமாக மதிப்பீடு செய்து வருகிறது.
மூலம்- swissinfo


