தடுப்புக்காவலில் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை நிகழ்ந்ததாகவும், அத்துடன் இஸ்ரேல், பாலஸ்தீனப் பகுதிகள், லெபனான் மற்றும் ஈரானில் பொதுமக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் வெளியான அறிக்கைகளைத் தொடர்ந்து, சுதந்திரமான விசாரணைகளுக்கு சுவிட்சர்லாந்து அழைப்பு விடுத்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் சபையில் உரையாற்றிய, ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் தோமஸ் குர்பர், நாட்டின் “கவலையை” வெளிப்படுத்தினார்.

இந்த அறிக்கைகள் “அதிர்ச்சியளிக்கின்றன” என்றும், இதற்குப் பொறுப்பானவர்கள் பொறுப்பேற்க வைக்கப்பட வேண்டும் என்றும் குர்பர் கூறினார்.
சர்வதேச சட்டத்தின் கீழ் மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினர் தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் தூதுவர் வலியுறுத்தினார்.
அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் எதிர்ப்பையும் மீறி, ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க் மேலும் நான்கு ஆண்டு காலத்திற்கு மீண்டும் நியமிக்கப்பட்டதை குர்பர் வரவேற்றார்.
மூலம்- swissinfo


