25.2 C
New York
Wednesday, August 12, 2026

பொலன்னறுவவில் ஒரே இடத்தில் கிடந்த ஏழு யானைகளின் உடல்கள்!

பொலன்னறுவை வெள்ளப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவின் ஹந்தபன்வில்லு ஏரியில் ஏழு காட்டு யானைகள் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து, அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு யானைகள், ஓடை கால்வாயை கடக்கும் போது சேற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த யானைகளில் 8 முதல் 10 வயதுக்குட்பட்ட ஐந்து குட்டி யானைகளும், 30 முதல் 35 வயதுடைய இரண்டு காட்டு யானைகளும் அடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles