2.3 C
New York
Sunday, March 29, 2026

கடும் வெப்பத்தால் 24 மணி நேரத்தில் 85 பேர்பலி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கடும் வெப்பதால் 85 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடங்கள் தெரிவித்துள்ளன.

அந்தவகையில் ஒடிசா, பீகார், ஜார்க்கண்ட், இராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. பீகார் மாநிலத்தின் பல பகுதிகளில் 44 டிகிரி செல்சியசை கடந்து வெப்பம் பதிவாகி வருகிறது.

வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் வெளியே நடமாட முடியாத சூழல் நிலவி வருகிறமை குறிப்பிடத்தக்கது

Related Articles

Latest Articles