20 C
New York
Tuesday, September 9, 2025

சுவிசில் ஒரே இரவில் வெடித்து சிதறிய ஏரிஎம் இயந்திரங்கள்.

சுவிசில் ஒரே நாளில் இரண்டு இடங்களில் ஏடிஎம் இயந்திரங்கள் வெடிக்க வைக்கப்பட்டுள்ளன.

பேர்ணில் உள்ள ஜெகன்ஸ்டோர்ஃப் என்ற இடத்தில் திங்கள்கிழமை இரவு ஏடிஎம் இயந்திரம ஒன்று வெடித்துச் சிதறியது.

வேலன்ட் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரமே வெடித்து சிதறியதாக, கன்டோன் பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதேவேளை, திங்கட்கிழமை இரவு, Küssnacht am Rigi SZ இல் உள்ள எரிபொருள் நிலையக் கடையில் உள்ள ஏரிஎம் இயந்திரம், அடையாளம் தெரியாத நபர்களால் வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாக Schwyz கன்டோன் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன் போது எவ்வளவு பணம் திருடப்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ஆங்கில மூலம் – theswisstimes

Related Articles

Latest Articles