மன்னார் –முருங்கன், பூவரசங்குளம் பகுதியில், நேற்றிரவு உழவு இயந்திரத்தின் மீது அமர்ந்திருந்த சிறுமி, தவறி விழுந்து, அதன் சில்லுக்குள் அகப்பட்டு உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு 7 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பூவரசங்குளம் பகுதியில் உள்ள விவசாயியான தந்தை, ஒருவர் தனது வயலில் உழுது கொண்டிருந்த போது, உழவு இயந்திரத்தின் மட்காட் பகுதியில் அவரது 8 வயது மகள் அமர்ந்திருந்துள்ளார்.
சிறுமி திடீரென தவறி கீழே விழுந்த போது, உழவு இயந்திரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளார்.
சிறுமியின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.