சுவிசின் Nussbaumen AG இல் நேற்றுமாலை இடம்பெற்ற வெடிப்பு மற்றும் தீப் பரவல் சம்பவத்தில், இரண்டு பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தில், 11 பேர் காயமடைந்ததாக கன்டோன் பொலிசார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் உயரமான கட்டடம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து அங்கு வசித்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த வெடிப்பால் சுற்றுவட்டார பகுதி கடுமையாக அதிர்ந்தது. எனினும் இந்த வெடிப்புக்கான காரணம் உடனடியாக அறிவிக்கப்படவில்லை.
ஆங்கிலம் மூலம்- The swiss times