சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரியவர்களின் எண்ணிக்கை மே மாதத்தில் அதிகரித்துள்ளது.
இடம்பெயர்வுக்கான செயலகம் கடந்த மாதம், 2357 புகலிடம் கோரிக்கை விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது.
இது முந்தைய மாதத்தை விட, சுமார் 3 சதவீதம் அதிகம் என்பதுடன், 2023 மே மாதத்தை விட 15சதவீதம் அதிகமானதாகும்.
மே மாதத்தில் அதிகளவாக ஆப்கானிஸ்தானில் இருந்து அதிகபட்சமாக, 840 சுவிசில் புகலிடம் கோரியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் பெண்கள், தங்கள் நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் மோசமான நிலைமையைக் காரணமாக முன்வைத்து தஞ்சம் கோருகின்றனர்.
அதையடுத்து, அதிகளவு புகலிட விண்ணப்பங்கள் துருக்கியர்களிடமிருந்து வந்துள்ளன.
அவர்களைத் தொடர்ந்து எரித்திரியா, அல்ஜீரியா மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளில் இருந்து புகலிட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக இடம்பெயர்வுக்கான செயலகம் அறிவித்துள்ளது.
மே மாதத்தில், முதற்கட்டமாக 3167 புகலிட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, 873 பேருக்கு புகலிடம் வழங்கப்பட்டது, 464 பேருக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டது.
1036 விண்ணப்பங்கள் குறித்து இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஆங்கிலம் மூலம் – The swiss times