பேர்ணில் நேற்று மாலை, பல்வேறு இடங்களில் பாரிய ஆலங்கட்டி மழை பெய்தது.
இதன்போது, சில ஆலங்கட்டிகள், கோல்ஃப் பந்து அளவுக்கு இருந்ததாக செய்திகள் கூறுகின்றன.
திடீரென்று இடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆலங்கட்டி மழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகக் குறுகியதாக இருந்த போதும், பெரியளவிலான ஆலங்கட்டிகள் கொட்டியதால், வீடுகளின் கூரைகள், வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன.
ஆங்கிலம் மூலம் – 20min