ஆஷ் (Aesch BL ) இல் 15 வயது சிறுவன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று ஒரு பாடசாலைக் கட்டடத்திற்கு அருகே, குறித்த சிறுவன், கத்தியால் குத்தப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, 18 வயதுடைய சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சந்தேக நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
குற்றத்தின் பின்னணி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
ஆங்கிலம் மூலம் – The swiss times