Fällanden இல் காணாமல் போன அய்லா என்ற இளம் பெண் நேற்று பிற்பகல் சூரிச்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியளவில் இவர் சூரிச் செல்வதற்காக Fällanden இல் உள்ள தனது வீட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்றிருந்தார்.
அதன் பின்னர் அவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், Irchelparkஇல் இளம் பெண்ணை அவதானித்த ஒரு வழிப்போக்கர் அவசர சேவைக்கு தகவல் கொடுத்தார்.
பின்னர் ஆம்புலன்ஸ் மூலம், 18 வயதான இளம்பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை.
மூலம் – 20min