தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழ்ப்பாணத்தில் இன்று வெளியிடப்பட்டது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் பொது வேட்பாளராக பாக்கியசெல்வம் அரியநேத்திரன் போட்டியிடுகிறார்.
நாளை தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ள நிலையில், தமிழ் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் பொது வேட்பாளரின் அலுவலகத்தில் வெளியிடப்படது.
இந்தநிகழ்வில் தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன், பொதுக்கட்டமைப்பில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
9 பக்கங்களில் அமைந்துள்ள இந்த தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளது.