சூரிச் Glattbrugg இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து இலங்கையர் ஒருவரின் சடலம் நேற்றுக்காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு கொலையாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து இரண்டு சுவிஸ் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Glattbrugg இல் Riedthofstrasse இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மீட்புப் பணியாளர்கள் நேற்றுக்காலை சடலத்தை மீட்டனர்.
இலங்கையைச் சேர்ந்த 34 வயதான நபரே இறந்ததாக கன்டோனல் பொலிஸ் அறிக்கை தெரிவிக்கிறது.
40 மற்றும் 54 வயதுடைய இரண்டு சுவிஸ் ஆண்கள் சூரிச் கன்டோனல் பொலிசாரால், கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் பாதிக்கப்பட்டவரின் குடியிருப்பில் இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மரணத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகள், குறித்து சூரிச் கன்டோனல் பொலிஸ் மற்றும் சூரிச் கன்டோனல் சட்டமா அதிபர் அலுவலகம் ஆகியவற்றால் விசாரிக்கப்பட்டு வருகிறது.
தடயவியல் நிபுணர்கள் குற்றம் நடந்த இடத்தில் ஆதாரங்களை சேகரித்துள்ளனர்.
குறித்த வீட்டிற்கு பலர் வந்து செல்வதாகவும், அங்கு யார் குடியிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை என்றும், அயல் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மூலம்- Zueritoday