25.6 C
New York
Tuesday, June 24, 2025

இந்தியாவில் இருந்து குழந்தைகளை தத்தெடுத்ததில் விதிமீறல்.

இந்தியாவில் இருந்து குழந்தைகளைத் தத்தெடுப்பதில் தொடர்புடைய குறைபாடுகளுக்கு துர்காவ் மற்றும் சூரிச் மாகாணங்கள் காரணம் என்று தெரியவந்துள்ளதாக, ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

1973 முதல் 2002 வரையிலான தத்தெடுப்பு நடைமுறைகள் குறித்த ஆய்வின் முடிவு இதுவாகும்.

இந்தியாவில் இருந்து குழந்தைகள் பெற்றோரின் அனுமதியின்றி முறையாக  தத்தெடுக்கப்பட்டனர் என்று ஆராய்ச்சித் திட்டத்தின் தலைவரான ரீட்டா கெசெல்ரிங் சுவிஸ் வானொலியான SRF இடம் தெரிவித்தார்.

எங்கள் விசாரணை சட்ட மீறல்களை அடையாளம் கண்டுள்ளது. உயிரியல் பெற்றோரிடமிருந்து சட்டப்பூர்வமாகத் தேவையான விலக்கு கிடைக்காத,  48 தத்தெடுப்புகளை இந்த இரண்டு கன்டோன்களிலும் நாங்கள் கண்டறிந்துள்ளோம் , ”என்று அவர் கூறினார்.

இருப்பினும் இந்திய நீதிமன்றங்கள் அதிகாரபூர்வமாக குழந்தைகளை தத்தெடுப்பதற்காக விடுவித்தன.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், கன்டோனல் அதிகாரிகள் கேள்வியின்றி தத்தெடுப்புகளுக்கு ஒப்புதல் அளித்தனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த ஆய்வின் முடிவுகள் ஆச்சரியப்படுவதற்கில்லை, என்று, இலங்கை மற்றும் பிற நாடுகளில் இருந்து தத்தெடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காக வாதிடும் “Back to the roots” சங்கத்தின் தலைவர் Sarah Ineichen கூறுகிறார்.

இந்த காலகட்டத்தில், இந்தியாவில் இருந்து 2,278 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டனர்.

2022 ஆம் ஆண்டில் St Gallen கன்டோனில், நடத்தப்பட்ட விசாரணையில்,   1973 க்கும் 2002 க்கும் இடையில்,  இலங்கையிலிருந்து  85 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டனர். தத்தெடுப்பு நடைமுறைகளில் ஒன்று கூட முற்றிலும் சட்டபூர்வமானதாக இல்லை. என்று கண்டறியப்பட்டது.

மூலம் – Swissinfo

Related Articles

Latest Articles