2.3 C
New York
Sunday, March 29, 2026

நீதிமன்றங்களில் தமிழ் சிங்கள பாகுபாடு உண்டு!

நாடாளுமன்ற சிறப்புரிமையை துஸ்பிரயோகம் செய்து சரத் வீரசேகர ஆற்றிய உரையினை கன்சார்ட்டிலிருந்து நீக்கவுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே நாடாளுமன்ற சிறப்புரிமையை துஸ்பிரயோகம் செய்ய வேண்டாமென்ற கோசத்துடன் வடகிழக்கில் உள்ள நீதிமன்றங்கள் முன்னதாக தமிழ் சட்டத்தரணிகள் இன்று போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

நாடாளுமன்றில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தமிழ் நீதிபதிகள் தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்தே முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பதாக வடமாகாண சட்டத்தரணிகள் இணைந்து கண்டண போராட்டம் ஒன்றை இன்று காலை முன்னெடுத்திருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பிரதேசத்தில் கடந்த 04ம் திகதி அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா களவிஜயத்தை முன்னெடுத்திருந்தார்.அப்போது அங்கு வருகை தந்த சரத் வீரசேகர கருத்து தெரிவிக்க முற்பட்ட வேளையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய கருத்துக்களை அந்த இடத்தில் தெரிவிப்பதற்கு நீதிபதி அனுமதி மறுத்திருந்தார்.

Related Articles

Latest Articles