Graubünden கன்டோனில் Samnaun இல் உள்ள பஸ் நிறுத்தத்தில் ஒருவரால் தாக்கப்பட்ட குழந்தை பலத்த காயமடைந்துள்ளது.
இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த குழந்தைக்கு அவசர மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
52 வயதுடைய நபர் ஆயுதம் ஒன்றினால் குழந்தையின் தலையில் தாக்கியுள்ளார்.
தாக்கப்பட்டதற்கான காரணம் தெரியவரவில்லை.
இந்த நிலையில் தாக்கியவர் இன்று காலை பொலிசாருக்கு தகவல் கொடுத்து குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, அவர் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.