31.4 C
New York
Thursday, June 19, 2025

நாடு கடத்தப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க பெடரல் நீதிமன்றம் உத்தரவு.

2014 இல் சுவிட்சர்லாந்தில் இருந்து இத்தாலிக்கு நாடு கடத்தப்பட்ட ஒரு சிரிய குடும்பத்திற்கு, இழப்பீடு வழங்குமாறு சுவிட்சர்லாந்தின் பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த நேரத்தில் 27 வார கர்ப்பமாக இருந்த சிரியப் பெண்ணுக்கு மருத்துவ உதவி வழங்க Brig எல்லைக் காவலர்கள் மறுத்து விட்டனர். அவர் Brig வந்தவுடன் வலியால் அவதிப்பட்டார்.

கணவர் பலமுறை கோரிக்கை விடுத்தும், எல்லைக் காவலர்கள் மருத்துவ உதவியை வழங்கவில்லை.

இதனால் அவர்கள் இத்தாலிக்கு திரும்பிய நிலையில், கருவில் இருந்த குழந்தை இறந்தது மருத்துவமனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தநிலையில், பெடரல் நிர்வாக நீதிமன்றம் அந்த பெண்ணுக்கு 12,000 பிராங் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் பெடரல் உச்சநீதிமன்றம் கணவனுக்கு 1,000 பிராங் வழங்க பணித்துள்ளது.

Brigஇல் நடந்த நிகழ்வுகளால் அந்த நபர் நேரடியாக பாதிக்கப்பட்டார்.

மனைவிக்கு எந்த உதவியும் வழங்கப்படாத நிலையில்,  அந்த மனிதனின் மன ஒருமைப்பாடு சட்டவிரோதமாக மீறப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles