Graubünden கன்டோனில் உள்ள Oberalp Pass பகுதியில் பனிச்சரிவு குறித்த ஒத்திகைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 3 பேர் பனிச்சரிவில் சிக்கி புதையுண்டனர்.
சுமார் 40 பேர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது சுமார் 30 மீற்றர் அகலமான பனிச்சரிவு ஏற்பட்டு அவர்கள் இருந்த பகுதியை தாக்கியது.
இதில் 3 பேர் புதையுண்டனர். உடனடியாக வான்வழி மீட்பு பிரிவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
பனிச்சரிவு மோப்ப நாய்களின் துணையுடன் சுமார் 10 நிமிடங்களில் அந்த 3 பேரும் மீட்கப்பட்டனர்.
அவர்கள் பத்திரமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவர் மட்டும் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மூலம்- 20min