21.3 C
New York
Thursday, June 18, 2026

திருடப்பட்ட வாகனம் விபத்தில் சிக்கியதால் ஒருவர் கைது.

Scherzingen இல், திருடப்பட்ட கார்  ஒன்று புதன்கிழமை விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார், மற்றொரு குற்றவாளி இன்னும் தலைமறைவாக உள்ளார் என,  Thurgau கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில், இம் கிரண்ட் மண் சாலையில் ஒரு வாகனம் ஒரு பள்ளத்தில் கிடப்பதாகவும், அதற்கு அடுத்ததாக இரண்டு ஆண்கள் நடந்து வருவதாகவும் கன்டோனல் அவசர அழைப்பு மையத்திற்கு தகவல் கிடைத்தது.

ஒரு பிராந்திய பொலிஸ் ரோந்து பிரிவுலு கைவிடப்பட்ட காரைக் கண்டறிந்தது. அது வீதியை விட்டு விலகி ஓடை படுக்கையின் இடது பக்கத்தில் நின்று கொண்டிருந்தது.

Kesswil. பகுதியில் முன்னதாக அந்த  வாகனம் திருடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து Kreuzlingen ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். இரண்டாவது சந்தேக நபர் இன்னும் தலைமறைவாக உள்ளார்.

மூலம்- polizeinews

Related Articles

Latest Articles