இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த, அவர் நேற்றிரவு காலமானார்.
நேற்று முன்தினம் காலை மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு நினைவிழந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்றிரவு அவர் சிகிச்சை பலனின்றி காலமானார் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.