20.1 C
New York
Wednesday, September 10, 2025

பெர்ன் சிறையில் 22 வயது கைதி சடலமாக மீட்பு.

பெர்ன் பிராந்திய சிறையில் புதன்கிழமை காலை, 22 வயதுடைய கைதி ஒருவர் அவரது அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆரம்ப விசாரணைகளின்படி, அவர் தற்கொலை செய்து கொண்டதாக பெர்ன் கன்டோனல் பொலிசார் கருதுகின்றனர்.

இந்த சம்பவம் பிப்ரவரி 5ஆம் திகதி காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பொலிசார் உடனடியாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

பெர்ன் பல்கலைக்கழகத்தில் உள்ள தடயவியல் மருத்துவ நிறுவனமும் விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

இறந்தவர் ஒரு மொராக்கோ குடிமகன் என்றும், மரணத்தின் சரியான சூழ்நிலைகள் இன்னும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles