0.1 C
New York
Sunday, February 22, 2026

உச்சத்தை தொட்ட காய்ச்சல் – மருத்துவமனைகளில் நெருக்கடி.

சுவிட்சர்லாந்தில் சில வாரங்களில் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்தப் பரவல், கடந்த ஆண்டை விட மிகவும் கடுமையாக உள்ளது.

தற்போதைய தரவுகள் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுகின்றன.

மேலும் சுகாதார அமைப்பில் நிலைமை பதற்றத் ஏற்படுத்தியுள்ளது.

ஜனவரி கடைசி வாரத்தில், 2,500 க்கும் மேற்பட்ட புதிய காய்ச்சல் நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சமஷ்டி பொது சுகாதார அலுவலகத்தில் (FOPH) பதிவாகியுள்ளன.

இது இந்த பருவத்திற்கான ஒரு புதிய உச்சத்தை குறிக்கிறது என்று FOPH தெரிவித்துள்ளது.

இது 100,000 மக்களுக்கு சுமார் 28 உறுதிப்படுத்தப்பட்ட காய்ச்சல் நோயாளிகள் இருப்பதை காட்டுகிறது.

கடந்த ஆண்டு, இது 100,000 பேருக்கு சுமார் 26.5 பேர் என்ற அளவிலேயே உச்சத்தை எட்டியது.

அதிகரித்து வரும் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை மருத்துவமனைகளுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

சுகாதார அதிகாரிகள், காய்ச்சல் தடுப்பூசி மற்றும் சுகாதார நடவடிக்கைகளை தொடர்ந்து பரிந்துரைக்கின்றனர்.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles