27.8 C
New York
Monday, July 14, 2025

மீண்டும் மின்வெட்டு அமுல் – இருளுகிறதா இலங்கை?

இலங்கையில் இன்று முதல் மீண்டும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக மின்சார சபை அறிவித்துள்ளது.

நேற்று பாணந்துறையில் உள்ள உபமின் நிலையத்தில் குரங்கு மோதியத்தில் நாடு முழுவதும் மின்சாரத் தடை ஏற்பட்டது.

இதனால் முற்பகல் 11.20 மணி தொடக்கம், சுமார் 5 மணிநேரம் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.

மின் விநியோகம் மீள வழங்கப்பட்ட நிலையில், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3 மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழந்துள்ளன.

அவற்றை பழுது பார்க்க 4 நாட்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் மின்பற்றாக்குறையை சமாளிக்க இன்று முதல், பிற்பகல் 3.30 மணிக்கும், 9.30 மணிக்கும் இடையில், சுழற்சி முறையில் ஒன்றரை மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

Related Articles

Latest Articles