1.8 C
New York
Sunday, March 29, 2026

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் போராட்டம்  07 ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டே இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டமும் , பேரணியும் முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பமாகி டிப்போ சந்தி நோக்கி யாழ் – கண்டி நெடுஞ்சாலை  ஊடாக பேரணி சென்றது. 

இப் போராட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் சமயத் தலைவர்கள்  பொதுமக்கள் என பலரும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. 

Related Articles

Latest Articles