30.1 C
New York
Wednesday, August 19, 2026

போதையில் விபத்துக்குள்ளான சிறுவன்- நண்பனும் குற்றவாளி.

ஆர்காவ் கன்டோனில்  ஓபர்லுன்கோஃபெனில் உள்ள ஜுகர்ஸ்ட்ராஸ்ஸில் 16 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டர்,  கட்டுப்பாட்டை இழந்து, வளைவு ஒன்றில் விபத்துக்குள்ளானது.

திங்கட்கிழமை காலை 7 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 16 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆரம்ப அறிக்கைகளின்படி, அவருக்கு பல எலும்பு முறிவுகள், சிராய்ப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டன.

சிறுவன் அதிக குடிபோதையில் இருந்ததை கன்டோனல் பொலிசார் கண்டறிந்தனர். போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் அவர்கள் சந்தேகிக்கின்றனர்.

விசாரணையில், 16 வயது சிறுவனுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என்பது தெரியவந்தது.

மோட்டார் சைக்கிளின் 17 வயது உரிமையாளர், ஓட்டுநர் உரிமம் இல்லாத சக நண்பனுக்கு மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்த அனுமதித்ததன் மூலம் குற்றவியல் குற்றத்தையும் செய்துள்ளார் என்றும் பொலிசார் கூறியுள்ளனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles