21.6 C
New York
Wednesday, September 10, 2025

பனிச்சரிவில் சிக்கி ஒருவர் பலி- இருவர் மீட்பு.

Kandersteg இல் உள்ள Morgenhorn இல் சனிக்கிழமை பிற்பகல், மதியம் 1:45 மணிக்கு இடம்பெற்ற பனிச்சரியில்,  மூன்று பேர் சிக்கிக்கொண்டதாக பெர்ன் கன்டோனல் காவல்துறை தெரிவித்துள்ளது.

மூன்று பேர் கொண்ட குழுவும் ஒரு தனி நபரும் மோர்கன்ஹார்னின் உச்சிக்கு பனிச்சரிவு சுற்றுலா சென்று கொண்டிருந்தபோது, ​​பனிச்சரிவு ஏற்பட்டது.

பனிச்சரிவில் மூன்று பேர் அடித்துச் செல்லப்பட்டனர்.

அவசர சேவைகள் உடனடியாக அனுப்பப்பட்டு , பகுதியளவு புதைக்கப்பட்ட மூவரும் மீட்கப்பட்டனர்.

இருப்பினும் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு ஆண்கள் சிறிய காயங்களுடன் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இறந்தவர் பெர்ன் மாகாணத்தில் வசிக்கும் 29 வயது சுவிஸ் குடிமகன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles