சுவிட்சர்லாந்தில் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் 3 மணிக்குப் பின்னர் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று MeteoSwiss எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று அதிகபட்ச வெப்பம் பதிவானதை அடுத்து இரவு இடியுடன் கூடிய மழை பெய்தது.
இன்று மாலை 3 மணி முதல் நள்ளிரவு வரை சூரிச், வலைஸ், டிசினோ, மற்றும் கிராபுண்டன் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை அடுத்த வாரம் வரை தொடரவுள்ளது.