ஜெனீவா ஏரியில் பாய்மரப் படகில் சவாரி சென்றவர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நண்பர்கள் குழு ஒன்று மோர்கஸ் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த ஒரு பாய்மரப் படகில் இரவைக் கழித்தது.
அவர்கள் விழித்தெழுந்தபோது, அவர்களது சக நண்பன் ஒருவர் காணாமல் போயிருந்தார். அவரது உடைமைகள் படகில் இருந்தன.
இதன்பின்னர் அவர்கள் அவசர சேவைகளைத் தொடர்பு கொண்டனர்.
இதையடுத்து நடத்தப்பட்ட தேடுதலில் மோர்கஸ் பிராந்தியத்தில் உள்ள காவல்துறையினர் ஜெனீவா ஏரியின் அடிப்பகுதியில் உள்ள துறைமுகத்தில் ஒரு உயிரற்ற உடலைக் கண்டுபிடித்தனர்.
அது வௌட்டின் பிரில்லியைச் சேர்ந்த 29 வயது சுவிஸ் நாட்டவரான- காணாமல் போன நபரின் உடல் என தெரியவந்தது.
அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
மூலம்- 20min