24.9 C
New York
Wednesday, June 17, 2026

பாதசாரிக் கடவையில் குழந்தை மீது மோதிய பஸ்.

ஷாஃப்ஹவுசென் நகரில் உள்ள பாக்ஸ்ட்ராஸ்ஸில் பாதசாரி கடவையில்,  எட்டு வயது குழந்தை மீது பஸ் மோதியுள்ளது.

வெள்ளிக்கிழமை மதியம், 12 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

இந்த விபத்தில் குழந்தை காயமடைந்து, அம்புலன்ஸ் மூலம்,  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் மற்றும் சூழ்நிலைகள் குறித்து, ஷாஃப்ஹவுசென் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீட்பு மற்றும் விபத்து விசாரணை காரணமாக, பாக்ஸ்ட்ராஸில் போக்குவரத்து தற்காலிகமாக தடைபட்டது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles