ஜெனீவாவின் கிராண்ட்-சகோனெக்ஸ் பகுதியில் புகலிடம் கோருவோருக்கான மையம் திறக்கப்படுவதற்கு எதிராக சுமார் 100 பேர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நேற்று நடந்த இந்த ஆர்ப்பட்டம் புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடம் கோருபவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்களில் பெரும்பாலோர் இளைஞர்களாக இருந்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாததால், ஏராளமான காவல்துறை அதிகாரிகள் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் போக்குவரத்தைத் தடுத்து வீதியின் குறுக்கே ஒரு சங்கிலியை இழுத்தபோதும் நிலைமை அமைதியாக இருந்தது.
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அவர்கள் கலைந்து கிராண்ட்-சகோனெக்ஸ் கிராமத்தை நோக்கி கால்நடையாகவும், சைக்கிளிலும் சென்றனர்.
2024 இல் சுவிட்சர்லாந்து 18.5% அதிகமான புகலிடம் கோருபவர்களை நிராகரித்தது
திங்களன்று திறக்கப்படவிருந்த கிராண்ட்-சகோனெக்ஸில் உள்ள மையத்தை அவர்கள் “அவமான மையம்” என்றும் அழைத்தனர்.
இந்த மையம் ஜெனீவா விமான நிலையத்தில் ஓடுபாதையின் முடிவில், ஒரு பைபாஸ் மோட்டார் பாதைக்கு அருகில் அமைந்துள்ளது.