27.1 C
New York
Thursday, June 19, 2025

நண்பர்களுடன் குளித்தவர் நீரில் மூழ்கி மரணம்.

நண்பர்களுடன் ஓய்வெடுத்த 26 வயது பிரெஞ்சுக்காரர் நியூசாட்டலில் உள்ள எவோல் விரிகுடாவின் நீரில்  மூழ்கி மரணமானார்.

செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில்  இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

அவர் காணாமல் போனதை அவதானித்த  அவரது நண்பர்கள் உடனடியாக அவரைத் தேடத் தொடங்கினர்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, 4 முதல் 5 மீட்டர் ஆழத்தில் அவர் நீருக்கடியில் இருப்பதைக் கண்டனர்.

அவரை மேற்பரப்புக்குக் கொண்டு வந்த அவர்கள்,  அவசர முதலுதவி சிகிச்சைகள் வழங்கிய போதும், அவர் உயிர் பிழைக்கவில்லை.

இது குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles