டிசினோ மாகாணத்தில் திங்கள்கிழமை மதியம் நடந்த ஒரு வீதி விபத்தில் 92 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து, லொகார்னோவின் முரால்டோ மாவட்டத்தில் நேற்றுப் பிற்பகல் 2:30 மணிக்கு நிகழ்ந்தது.
முதற்கட்ட விசாரணைகளின்படி, அப்பென்செல் ஆசெர்ரோடனில் வசிக்கும் 63 வயது சுவிஸ் நாட்டவர் ஒருவர், லொகார்னோவை நோக்கி ஒரு லொறியை ஓட்டிச் சென்று, வியா ஸ்டேசியோன் சாலையில் உள்ள பாதசாரிகள் கடக்கும் இடத்தில் நிறுத்தியுள்ளார்.
அப்போது, வல்லேமஜியாவைச் சேர்ந்த 92 வயது முதியவர் வீதியைக் கடந்தார். இன்னும் அறியப்படாத காரணங்களுக்காக, லொறி ஓட்டுநர் தொடர்ந்து வாகனத்தை ஓட்டிச் சென்று அந்த முதியவர் மீது மோதியுள்ளார்.
காவல்துறையினரும் மருத்துவ உதவியாளர்களும் உடனடியாக முதலுதவி அளிக்கத் தொடங்கியபோதிலும், விபத்தில் பலத்த காயமடைந்த அந்த 92 வயது முதியவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மூலம்-swissinfo

