நண்பர்களுடன் ஓய்வெடுத்த 26 வயது பிரெஞ்சுக்காரர் நியூசாட்டலில் உள்ள எவோல் விரிகுடாவின் நீரில் மூழ்கி மரணமானார்.
செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
அவர் காணாமல் போனதை அவதானித்த அவரது நண்பர்கள் உடனடியாக அவரைத் தேடத் தொடங்கினர்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, 4 முதல் 5 மீட்டர் ஆழத்தில் அவர் நீருக்கடியில் இருப்பதைக் கண்டனர்.
அவரை மேற்பரப்புக்குக் கொண்டு வந்த அவர்கள், அவசர முதலுதவி சிகிச்சைகள் வழங்கிய போதும், அவர் உயிர் பிழைக்கவில்லை.
இது குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min