ஜெனீவா பொதுப் போக்குவரத்தில் (TPG) புதிய தலைமுறை இ-பஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது அமைதியானது, மிகவும் வசதியானது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முதல் பஸ்,, டிசம்பர் 14 ஆம் தேதி 5 ஆம் லைனில் சேவையில் இணையும்.
இது வலையமைப்பில் உள்ள ஆறு லைன்களில் முதல் லைன் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
2030 ஆம் ஆண்டுக்குள் பஸ்களும் இதே வகையிலானதாக மாற்றப்படும்.
இதற்கு சில நிறுத்தங்கள் மற்றும் முனையங்களில் விரைவாக சார்ஜ் செய்ய முடியும்.
முற்றிலும் இ-பஸ்களைக் கொண்ட ஒரு வாகனக் குழுவிற்கு மாறுவதற்கு 350 மில்லியன் பிராங்குகள் செலவாகும்.
மூலம்- 20min