23.3 C
New York
Wednesday, June 17, 2026

பாசல் நீச்சல் குளங்களிலும் வெளிநாட்டவர்களுக்கு தடை?

பாசலின் வெளிப்புற நீச்சல் குளங்களில் வெளிநாட்டவர்களுக்குத் தடை விதிப்பது குறித்து, பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜூரா பிராந்தியத்தில் உள்ள போரென்ட்ரூயில் உள்ள நிலைமையைப் போலவே, எதிர்காலத்தில் பாசல் நீச்சல் குளங்களில் வெளிநாட்டவர்களின்  அணுகலைக் கட்டுப்படுத்த வேண்டுமா என்பதை பரிசீலிக்குமாறு அரசாங்க கவுன்சிலைக் கோரும் ஒரு தீர்மானத்தை கிராண்ட் கவுன்சிலர் ஜோயல் துரிங் (SVP) சமர்ப்பித்துள்ளார்.

ஓரளவுக்கு வெளிநாட்டுக் குழுக்களின் செயற்பாடுகளால் கடந்த ஐந்து வாரங்களில் பலமுறை சென் ஜேக்கப் நீச்சல் குளத்திற்கு பொலிசார் செல்ல வேண்டியிருந்தது.

கோடையில் நீச்சல் குளங்களை நாடும் சுவிஸ் நாட்டவர்களுக்கு அணுகல் வசதிகள் கிடைக்காமல் போவதால் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

இதனால், போரென்ட்ரூயில், நீச்சல் குளத்திற்குள் சுவிஸ் குடிமக்கள் மற்றும் அனுமதி வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே நுழைய முடியும் என்பது போன்ற விதிமுறையை பாசல்-ஸ்டாட்டிற்கு உருவாக்குவது பற்றி பரிசீலிக்குமாறு, SVP கிராண்ட் கவுன்சிலர் ஜோயல் துரிங் கிராண்ட் கவுன்சிலில் பிரேரணையை முன்வைத்துள்ளார்.

மூலம் -bluewin

Related Articles

Latest Articles