18.3 C
New York
Thursday, May 14, 2026

டாவோசில் யூதரை தாக்கிய புகலிட கோரிக்கையாளர்களுக்கு சிறைத்தண்டனை.

கடந்த ஆண்டு டாவோஸில் 19 வயது பிரிட்டிஷ் ஆர்த்தடாக்ஸ் யூதரை தாக்கிய இரண்டு புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு  சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் முகத்தில் குத்தினர்,  துப்பினார்கள், ‘பலஸ்தீனத்தை விடுவிப்போம்’ என்று கத்தினார்கள்,” என்று பாதிக்கப்பட்டவர் அப்போது கூறியிருந்தார்.

இப்போது, இரண்டு புகலிடக் கோரிக்கையாளர்களில் ஒருவர் ஆறு மாத சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார்.

யூத இளைஞனைத் தாக்கிய அவருக்கு ஆறு மாதங்களும், மற்றவருக்கு  இரண்டு மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளார்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles