ஜூரா கன்டோனில் உள்ள கூரென்ட்லினில் ஒரு வீட்டின் தோட்டத்தில் மூன்று பீரங்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவற்றில் மிகப்பெரிய குண்டு 40 கிலோகிராம் எடை கொண்டது என பொலிசார் தெரிவித்தனர்.
இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் சேவை குண்டுகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டது.அவர்களின் விசாரணையில் அவை வெடிமருந்தின்றி இருந்தமை தெரியவந்தது.
ஒரு கட்டிடத்தை புதுப்பிக்கும் போது அல்லது சுத்தம் செய்யும் போது இதுபோன்ற கண்டுபிடிப்புகள் அசாதாரணமானது அல்ல என்று கன்டோனல் பொலிஸ் தெரிவித்துள்ளது.
வெடிபொருள் சாதனங்கள் பெரும்பாலும் மிகவும் பழமையானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

