10.2 C
New York
Monday, March 30, 2026

சூரிச்சில் பொலிஸ் சுழியோடி நீரில் மூழ்கி மரணம்.

சூரிச்சின் டயட்டிகானில்  நேற்றுமுன்தினம் ஒரு நடவடிக்கையின் போது, சூரிச் கன்டோனல் பொலிசைச் சேர்ந்த ஒரு பொலிஸ் சுழியோடி உயிரிழந்துள்ளார்.

விபத்து நடந்தபோது பொலிசார் தண்ணீரில் ஒருவரைத் தேடிக்கொண்டிருந்தனர்.

மாலை 5 மணியளவில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நீரில் மூழ்கி உயிரிழந்த சுழியோடியை சக சுழியோடிகள் அரை மணி நேரம் கழித்து, மீட்டனர்.

உயிரிழந்தவர் 44 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles