15.9 C
New York
Wednesday, May 13, 2026

சிட்னி பயங்கரவாத தாக்குதலைக் கண்டிக்கிறார் சுவிஸ் ஜனாதிபதி.

அவுஸ்ரேலியாவின் சிட்னியில் உள்ள பொண்டி கடற்கரையில் யூதர்களின் விழாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை சுவிஸ் ஜனாதிபதி கரின் கெல்லர்-சுட்டர் கண்டித்துள்ளார்.

அனைத்து வகையான வன்முறை, யூத எதிர்ப்பு மற்றும் வெறுப்பை சுவிட்சர்லாந்து நிராகரிக்கிறது என்று கெல்லர்-சுட்டர் X இல் ஒரு பதிவில் கூறியுள்ளார்.

பொண்டி கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் சுவிட்சர்லாந்து ஒற்றுமையாக நிற்கிறது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சிட்னியில் ஒரு யூத திருவிழாவில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரும் கொல்லப்பட்டதாக மாநில அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதல் நடத்திய ஒருவர், இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 29 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles