சுவிட்சர்லாந்தில் லெஜியோனேயர்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2001 ஆம் ஆண்டு முதல் அதிகரித்து வருகிறது.
ஜனவரி மாத இறுதியில் மத்திய பொது சுகாதார அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி,இந்த பக்டீரியாவினால் வயதான ஆண்கள் குறிப்பாக பாதிக்கப்படுகின்றனர்.
2025 ஆம் ஆண்டில் பொது மழைநீர் சேகரிப்புகளை ஆய்வு செய்தபோது பாசல் கன்ரி கன்டோனல் ஆய்வகம் லெஜியோனெல்லாவால் பெருமளவில் மாசுபட்டிருப்பதைக் கண்டறிந்துள்ளது.
ஓய்வூதிய மற்றும் முதியோர் இல்லத்தில் பல குடியிருப்பாளர்களும் ஒரு ஊழியரும் நோய்வாய்ப்பட்டதாக இந்த ஆய்வகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
2020 முதல், பதிவான வழக்குகளின் எண்ணிக்கை விபரங்களின்படி 2023 இல் 574 ஆக உயர்ந்து 2024 இல் 491 ஆகக் குறைந்தது.
அறிக்கையின்படி, இது 100,000 மக்களுக்கு 5.5 வழக்குகள் என்ற விகிதத்திற்கு ஒத்திருக்கிறது. 13.9 வழக்குகள் என்ற விகிதத்துடன், டிசினோ அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மூலம்- swissinfo

