20.2 C
New York
Monday, June 22, 2026

சூரிச் விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள் 2 லிட்டர் திரவங்களை கொண்டு செல்ல அனுமதி.

வெள்ளிக்கிழமை முதல், சூரிச் விமான நிலையத்திலிருந்து பயணம் செய்யும் பயணிகள், இரண்டு லிட்டர் வரை கொள்ளளவு கொண்ட கொள்கலன்களில் திரவங்களை தங்கள் கைப்பெட்டிகளில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இனி திரவங்களை தனியாக பைகளில் அடைக்க வேண்டிய அவசியம் இல்லை.

சூரிச்சில் தங்கள் பயணத்தைத் தொடங்கி, பாதுகாப்புக் கட்டுப்பாட்டுக் கட்டிடத்தில் பாதுகாப்புச் சோதனைகளுக்கு உட்படும் பயணிகளுக்கு இந்த புதிய விதிகள் பொருந்தும் என்று சூரிச் விமான நிலையம் அறிவித்துள்ளது.

எனினும், இணைப்புப் பயணிகளுக்கு முந்தைய விதிகள் தொடர்ந்து பொருந்தும்.

விமான நிலையத்தில் பாதுகாப்புப் பகுதியில் நிறுவப்பட்டுள்ள புதிய CT ஸ்கானர்கள், சமீபத்திய தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன; அவை கைப்பெட்டிகளின் முப்பரிமாணப் பகுப்பாய்வைச் சாத்தியமாக்குவதால், திரவங்கள் மற்றும் மின்னணு சாதனங்களை நம்பகத்தன்மையுடன் பரிசோதிக்கும் திறன் கொண்டவை என்று சூரிச் விமான நிலையம் மேலும் கூறியது.

எனவே, வெள்ளிக்கிழமை முதல், பாதுகாப்புச் சோதனை கட்டிடத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் திரவங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் பயணிகளின் கைப்பெட்டிகளிலேயே இருக்கலாம். இதன் பொருள், திரவங்களை தனியாக வெளிப்படையான பிளாஸ்டிக் பைகளில் அடைக்க வேண்டிய அவசியம் இனி இல்லை.

தெர்மாஸ் குடுவைகள் போன்ற இரட்டைச் சுவர் கொண்ட போத்தல்கள், பாதுகாப்புச் சோதனைகளில் ஒரு குறிப்பிட்ட சவாலை ஏற்படுத்துவதால், அவை காலியாக இருந்தால் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் என்று சூரிச் விமான நிலையம் சுட்டிக்காட்டுகிறது.

விமான நிலையத்தைப் பொறுத்து, திரும்பும் பயணத்திற்கும் அனுமதிக்கப்பட்ட திரவ அளவுகள் தொடர்பான வெவ்வேறு விதிமுறைகள் பொருந்தக்கூடும் என்பதையும் இது வலியுறுத்துகிறது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles