நீச்சல் குளங்கள் மற்றும் பொதுக் குளியல் இடங்களில் புர்கினி அணிவதைத் தடைசெய்யும் சட்டத்தை ஜெனீவா இயற்றி வருகிறது.
நேற்று மாலை வலதுசாரி பெரும்பான்மையினரால் நிறைவேற்றப்பட்ட இந்த புதிய சட்டம், புர்கினி ஆடையை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை.
எனினும். புதிய சட்டத்தின்படி, நீச்சல் குளங்களில் ஒன்று அல்லது இரண்டு துண்டுகளாக உள்ள நீச்சல் உடைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
அவற்றின் அதிகபட்ச நீளம் முழங்காலுக்குக் கீழே இருக்க வேண்டும் மற்றும் கைகள் சுதந்திரமாக விடப்பட வேண்டும்.
சுவிஸ் மக்கள் கட்சியினால் முன்வைக்கப்பட்ட இந்த வரைவுச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள இந்த ஆடைகள், புர்கினிகளை பயன்படுத்துவதில் இருந்து விலக்குகிறது; அந்த வரைவுச் சட்டம் இந்த வகை ஆடைகளைக் குற்றமாக்கியிருக்கிறது.
மூலம்- bluewin

