23.4 C
New York
Thursday, August 13, 2026

அமெரிக்கா- ஈரான் இடையே 29-30 ஆம் திகதிகளில் சுவிட்சர்லாந்தில் மீண்டும் பேச்சு.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான ஒரு தொழில்நுட்பப் பணிக் கூட்டம் ஜூன் 29-30 திகதிகளில் சுவிட்சர்லாந்தில் திட்டமிடப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

பெர்னில் உள்ள கூட்டாட்சி வெளியுறவுத்துறை இதை உறுதிப்படுத்தவில்லை.

சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டம் தொடர்பாக ரூபியோ குவைத் நகரில் அறிவித்தார்.

இரு நாடுகளின் உயர்மட்டப் பிரதிநிதிகள் சமீபத்தில் நிட்வால்டனில் உள்ள பர்கன்ஸ்டாக் ரிசார்ட்டில் சந்தித்தனர்.

மத்தியஸ்தர்கள் இந்தப் பேச்சுவார்த்தைகளை “நேர்மறையானவை” மற்றும் “ஆக்கப்பூர்வமானவை” என்று விவரித்ததோடு, “ஊக்கமளிக்கும் முன்னேற்றம்” என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles