தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுரங்கப்பாதையில் நின்ற, சூரிச் விமான நிலையத்தின் ஸ்கைமெட்ரோவிலிருந்து சுமார் 50 பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
விமான நிலையத்தின் பிரதான கட்டடத்தை முனையம் E உடன் இணைக்கும் இந்த முழுமையான தானியங்கி மெட்ரோ, 1.1 கிலோமீட்டர் வழித்தடத்தில் நின்றது. மின்வெட்டே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் சுமார் 30 நிமிடங்கள் ரயிலில் தவித்தனர். பின்னர், அவர்கள் அதற்கென ஒதுக்கப்பட்ட வெளியேற்ற நடைபாதை வழியாக ஸ்கைமெட்ரோவிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.
வெளியேற்றப்பட்ட பயணிகள் அனைவரும் இணைப்பு விமானங்கள் இல்லாத உள்ளூர் பயணிகள் ஆவர். இடைவழிப் பயணிகள் பாதிக்கப்படவில்லை.
சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஸ்கைமெட்ரோ மீண்டும் முழுமையாகச் செயல்படத் தொடங்கியது. இந்தச் சம்பவத்தால் விமானச் சேவைகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
மூலம்- swissinfo


