26.8 C
New York
Tuesday, July 21, 2026

ஜெர்மனி தடைவிதித்தாலும் சுவிசில் மதுபான விற்பனை தொடரும்.

ஜெர்மனியில் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், சுவிஸ் பெடரல் ரயில்வே ரயில் நிலையங்களில் மதுபான விற்பனையைத் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் முன்னணி ரயில்வே நிறுவனமான டாய்ச் பான், பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இந்தத் தடையை விதித்துள்ளது. எனினும், சுவிட்சர்லாந்தில், இரவு 10 மணி வரை மதுபான விற்பனை தொடர உள்ளது.

2026 ஒக்டோபர் 15,முதல் ஜெர்மனியின் 5,400 ரயில் நிலையங்களில் பியர், வைன் அல்லது ஸ்பிரிட்ஸ் அருந்துவது தடை செய்யப்படும்.

ஆனால், சுவிட்சர்லாந்தில் உள்ள ரயில் நிலையங்கள் அல்லது ரயில்களில் மது அருந்துவதற்கு பொதுவான தடை விதிக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை என்று சுவிஸ் பெடரல் ரயில்வே, தெரிவித்துள்ளது.

ரயில் நிலையக் கடைகளில் இரவு 10 மணிக்கு மேல் மதுபானம் விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

ஊழியர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, தற்போது ரயில் நிலையங்களில் நடைமுறையில் உள்ள விதிமுறைகள் தொடர்ந்து பொருந்தும்.

மது அருந்துவதால் இடையூறு விளைவிக்கும் அல்லது ஆபத்தான நடத்தை ஏற்படும்போது, ​​பாதுகாப்பு ஊழியர்கள் தலையிட இது அனுமதிக்கிறது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles