சவூதி அரேபியா மீது ஹூத்தி போராளிக் குழுக்கள் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, பதற்றம் அதிகரிப்பது குறித்து சுவிஸ் அதிகாரிகள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
அனைத்துத் தரப்பினரும் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்தத் தாக்குதல்கள் பொதுமக்களுக்குக் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்றும், பிராந்தியத்தில் மேலும் பதற்றம் அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் சுவிஸ் வெளியுறவு அமைச்சு இன்று பிற்பகல் X தளத்தில் எழுதியுள்ளது.
அனைத்துத் தரப்பினரும் சர்வதேசச் சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் சுவிஸ் வெளியுறவு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த வாரம், ஈரான் ஆதரவு ஹூத்தி போராளிக் குழுக்கள் மின்னல் வேகத் தாக்குதல் மூலம் யேமனின் மேற்குக் கடற்கரையைக் கைப்பற்றின. இதன்மூலம், செங்கடலின் நுழைவாயிலில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த பாப் அல்-மண்டாப் நீரிணையை நெருங்கியுள்ளன.
மூலம்- swissinfo


