வியாழக்கிழமை மதியம் A3 நெடுஞ்சாலையில் உள்ள மம்ப்ஃப்-நார்ட் ஓய்வுப் பகுதியில் ஒரு கோரமான சாலை விபத்து ஏற்பட்டது.
மெர்சிடிஸ் ஓட்டுநர் ஒருவர், பாசல் நோக்கி நெடுஞ்சாலையில் பயணித்து, பிற்பகல் சுமார் 2:15 மணியளவில் அந்த ஓய்வுப் பகுதிக்குள் நுழைந்தார்.

அங்கு, நிறுத்தப்பட்டிருந்த ஒரு செமி-டிரெய்லர் லொறியின் பின்புறத்தில் அந்த கார் பலமாக மோதியது. அந்த கார் டிரெய்லருக்கு அடியில் சிக்கிக்கொண்டது.
சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் இறந்துவிட்டதாக அவசர சேவைப் பிரிவினர் அறிவித்தனர். மோசமாக சேதமடைந்த வாகனத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர்.
இறந்தவரின் அடையாளம் ஆரம்பத்தில் தெளிவாகத் தெரியவில்லை. விபத்துக்கான காரணமும் தற்போது தெரியவில்லை.
ஆர்காவ் மாகாண காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
மூலம்- bluewin


